india

img

மார்ச் 31இல் “இந்தியா” கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி

கெஜ்ரிவால் கைது,  மோடி அரசின்  தரம் தாழ்ந்த அரசியல் நடவடிக்கை மற்  றும் நாட்டில் என்ன நடக்கி றது என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக “இந் தியா” கூட்டணி கட்சிகள் மார்ச் 31 அன்று தில்லி ராம்  லீலா மைதானத்தில் பிரம்  மாண்ட பேரணி- பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளன. இந்த கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமை தாங்கும் நிலையில், தில்லி அமைச்சர் கோபால் ராய்  “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சீல் அகற்றப்படுமா?
கெஜ்ரிவால் கைது கார ணமாக ஆம் ஆத்மி கட்சி  தில்லியில் மூன்றாவது நாளாக போராடி வருகின் றன. போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி  காவல்துறை ஐடிஓ உள்  ளிட்ட முக்கிய சாலை களுக்கு சீல் வைத்துள்ளது.  சீல் வைக்கப்பட்ட சாலை யில் போக்குவரத்து முற்றி லும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் சார்பில் பேரணி நடைபெறவுள்ள இடமான ராம்லீலா மைதா னமும் ஐடிஓ மார்க்கத் தில் உள்ளதால், முடக்கப்பட் டுள்ள சாலைகள் திறக்கப்  படுமா, அரசியல் காழ்ப்பு ணர்ச்சியால் தொடர்ந்து சாலைகளை மோடி அரசு சீல் வைக்குமா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.